சிறுமியை கடத்தி வந்த மகன்.. 10 நாட்கள் வீட்டில் வைத்து.. தப்பித்த சிறுமி சொன்ன அதிர்ச்சி தகவல்..

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மகன் மற்றும் உடந்தையாக இருந்த தாயை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்நாதன் - சாந்தி தம்பதியின் மகன் ஜெயக்குமார் என்பவர், 17 வயது சிறுமியை தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார்.

மகளைக் காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்த நிலையில், போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், 10 நாட்களாக சிறுமியை அடைத்து வைத்து, ஜெயக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கு அவரது தாய் சாந்தியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. 10 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பி வந்த மகளிடம் பெற்றோர் விசாரித்தபோது, நடந்தவற்றை கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் மற்றும் அவரது தாய் சாந்தியை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்