பைக்கை அடமானம் வைத்து குடித்து உஷாரே இல்லாமல் கிடந்த மகன் - "ஒரு மனசாட்சி இல்லையாடா".. தாய் கண்ணீர்

x

திருப்பூரில் பைக்கை அடமானம் வைத்து குடித்து விட்டு செல்போனை தொலைத்த மகனைக் கண்டு ஒரு தாய் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

திருப்பூர் கோல்டன் நகரில் பழனி என்பவர் நடத்தும் டாஸ்மாக் பாரில் மே தினத்தன்று அரசு விதியை மீறி மது பாட்டில்கள் விற்கப்பட்டதாகத் தெரிகிறது. அங்கு குடிக்க வந்த ஒரு இளைஞர் போதை தலைக்கேறி அங்கேயே படுத்து விட்டார். இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த அந்த இளைஞரின் தாய், தன் மகன் பாரில் குடித்து விட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்... வந்த பைக் மற்றும் வைத்திருந்த செல்போனைக் காணாத நிலையில், அந்த இளைஞர் பைக்கை அடமானம் வைத்துக் குடித்து விட்டு போதையில் கிடந்த போது செல்போன் மாயமானது தெரிய வந்தது. விடுமுறை அன்று பாரைத் திறந்து வைத்து தன் மகனை இந்த நிலைக்கு தள்ளி விட்டதாக அந்தத் தாய் கண்ணீர் மல்க பேசிய காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்