கிச்சனில் பெரியம்மாவை 10 துண்டாக.. வெட்டி சூட்கேசில் பேக் செய்த மகன்.. மிரளவிட்ட 'பக்கெட்' கொலை

x

நாட்டையே உலுக்கிய ஷரத்தா கொலை போல, 64 வயது மூதாட்டியை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டு, உடலை 10 பாகங்களாக வெட்டி சூட்கேசில் எடுத்து சென்று வீசிய கொடூரம், ஜெய்ப்பூரி அரங்கேறியுள்ளது.

ஜெய்பூரில் சேர்ந்த அனுஜ் சர்மா என்பவர் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது, அனுஜ் சர்மாவை, அவரது உறவினரான 64 வயது மூதாட்டி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுஜ் சர்மா, சுத்தியால் மூதாட்டியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். உடலை மறைப்பதற்காக மார்பிள் அறுக்க பயன்படுத்தும் கருவியை கொண்டு, மூதாட்டியை 10 துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர், உடல் பாகங்களை பக்கெட் மற்றும் சூட்கேசில் வைத்து வெளியே எடுத்து சென்று வீசியுள்ளார். உடல் பாகங்களை ஆளில்லா பகுதியில் வீசிய பிறகு, வீட்டிற்கு வந்த அனுஜ் சர்மா, மூதாட்டியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். எனினும், அனுஷ் சர்மாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், சமையல் அறையில் இருந்த ரத்த கரையையும், சிசிடிவியில் அனுஜ் சர்மா சூட்கேஸ் மற்றும் பக்கெட்டுடன் சென்றதையும் பார்த்து சந்தேகித்தனர். இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அனுஜ் சர்மா கொடூரத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது


Next Story

மேலும் செய்திகள்