தாயை கிண்டல் செய்த வாலிபரை மகன் ஓட ஓட விரட்டி கொலை..பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

தாயை கிண்டல் செய்த வாலிபரை மகன் ஓட ஓட விரட்டி கொலை..பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்


ஆந்திராவில், தாயை கிண்டல் செய்த வாலிபரை, மகன் ஓட ஓட விரட்டி கொலை செய்த வீடியோ, வெளியாகி உள்ளது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீனு என்ற இளைஞர்,

பெண் ஒருவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் தன்னுடைய மகனிடம் கூறி இருக்கிறார். ஆத்திரமடைந்த மகன், தனது தாயை பைக்கில் ஏற்றிக்கொண்டு சீனு இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார். சீனு சாலையில் அமர்ந்திருப்பதை பார்த்த அவர்கள், அங்கேயே பைக்கை நிறுத்திவிட்டு, சீனுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சீனு தப்பியோடி உள்ளார். இருந்தும்,அவரை விடாமல் பின் தொடர்ந்து ஓடிய அந்த பெண்ணின் மகன், சீனுவை கொலை செய்துள்ளார். வெறி அடங்காத அவர், கொலையானவரின் காலை பிடித்து, 30 அடி தூரம் இழுத்து வந்து, தாயின் காலடியில் வீசியுள்ளார். இது குறித்த புகாரைத்தொடர்ந்து,

வழக்கு பதிவு செய்த விசாகப்பட்டினம் போலீசார், அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து, தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்