காவல்துறை விசாரணை முடிந்து வீடு திரும்பிய ரவுடி உயிரிழப்பு.. - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை எம்ஜிஆர் நகரில் வசித்து வந்த ரவுடி ராயப்பேட்டை ஸ்ரீதர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கொடுத்த நகைத் திருட்டு புகாரின்பேரில், எம்ஜிஆர் நகர் போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய அவருக்கு, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக, கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மறுபடியும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், விசாரணையின்போது ஸ்ரீதரை போலீசார் தாக்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரிய வரும் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்