அரியவகை சிவ குண்டல மரம் அகற்றம்... மாற்று இடத்தில் நட்ட வனத்துறையினர்

x

தேனி மாவட்டம், போடி - மூணார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த, சாலையோர சிவ குண்டல மரம் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில், 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அரியவகை சிவ குண்டல மரம் அப்பகுதியில் இருந்து வனத்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிக்காக அகற்றப்பட்ட இந்த மரம், அருகில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக நடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்