"13-ம் தேதி அதிமுக அறிவித்த போராட்டம் தள்ளிவைப்பு" - அதிமுக அறிவிப்பு

x

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் 13ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள், வட தமிழகத்தில் மட்டும் 21ஆம் தேதிக்கு மாற்றி, அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மின் கட்டணம், பால் விலை உயர்வு,சொத்து வரி, உள்ளிட்டவற்றை கண்டித்து நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை 13-ம் தேதி பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதனால் பல மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வட தமிழகத்தில் மட்டும் ஆர்ப்பாட்டங்கள் 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் அறிவித்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்