சென்னையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

x

20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கடந்த 2 நாட்களாக 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வரி கத்திரிக்காய் தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சி தற்போது 200 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் 80 ரூபாய்க்கும், 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரைக்காய் 60 ரூபாய்க்கும், எலுமிச்சை ரூபாய் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைவு காரணமாக தக்காளி மற்றும் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்