"நமது ஒட்டு மொத்த வாழ்க்கையையே மாற்றும் சக்தி 5ஜி"-பிரதமர் மோடி பெருமிதம்

x

5ஜி சேவை இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறினார்.

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவின் கடைசி மூலைக்கும் தகவல் தொடர்பை கொண்டு செல்லும் எனப் பேசிய பிரதமர் மோடி,

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலைநோக்கு பார்வையின்கீழ், 5ஜி சேவை மிகப்பெரும் மைல்கல் எனக் குறிப்பிட்டார்.

எல்லையற்ற வாய்ப்புகளுக்கான தொடக்கமாக 5ஜி சேவை அமைந்துள்ளதாகவும்,...

எதிர்கால வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான உற்பத்தியை வடிவமைப்பதில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றும் கூறினார்.

2ஜி, 3ஜி, 4ஜி போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்ட போது, தொழில்நுட்பத்திற்காக இந்தியா பிற நாடுகளை சார்ந்து இருந்ததாகவும்,

5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய வரலாறு படைத்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அனைவருக்கும் இணைய வசதி கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அரசு பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும்,...

5ஜி சேவை நமது ஒட்டு மொத்த வாழ்க்கையையே மாற்றும் சக்தியாக விளங்கப் போகிறது என்றும், நாட்டின் பொருளாதார மேம்பாடு மற்றும் அசாதாரண வளர்ச்சிக்காக 5ஜி சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்