பல கட்ட விசாரணைக்கு பின் கைதானார் பிரபல யூடியூபர்

x

கேரளாவில் பிளஸ் 2 தேர்வு முடிவு ரத்து என்று பொய் செய்தி வெளியிட்ட யூடியூபரான பா.ஜ.க கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். கேரளாவில் கடந்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் வீ கேன் என்ற பெயர் கொண்ட யூடியூப் சேனலில், பிளஸ் டூ தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், யூடியூப் சேனலை நடத்தியது கொல்லத்தை சேர்ந்த நிகில் மனோகர் என்பும், அவர் பாஜக கவுன்சிலர் என்பதும் தெரிய வந்த‌து. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்