கள்ளத்தொடர்பில் இருந்த காவலர்.. தட்டிக்கேட்ட மனைவியின் அண்ணன்.. ஆத்திரத்தில் போலீஸ்காரர் செய்த செயல்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கள்ளத் தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியின் அண்ணனை, காவலர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கராபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த யுவராஜுக்கு பெண்களிடம் கள்ளத்தொடர்பு இருந்ததால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்தார். கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக யுவராஜுக்கும், அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டபோது, மனைவியின் அண்ணன் அதை தட்டிக்கேட்டார். அப்போது, அவரை யுவராஜ் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் காயமடைந்த மைத்துனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்