சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடிய காவலர்... வளைத்து பிடித்த போலீஸ்

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில், போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலரை, போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர், பெரம்பலூரில் ஆயுதப்படை போலீசாராக உள்ளார். 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய புகாரில், பிரபாகரனை போலீசார் கைது செய்த நிலையில், அவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடினார். அதனைத் தொடர்ந்து, பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் தலைமறைவான பிரபாகரனை போலீசார் தேடி வந்த நிலையில், கள்ளகுறிச்சி இந்திலி கிராமத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்