காதலன் காதலிக்கு தாலி கட்டுவதற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போலீஸ் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

கேரளாவில், முகூர்த்த நேரத்தில் புகுந்து மணப்பெண்ணை போலீசார் இழுத்துச் சென்ற சம்பவத்தில், காதலனிடம் காதலி சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதி அளித்தது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே காயங்குளம் பகுதியை சேர்ந்த அல்பியா என்ற பெண், திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதியை சேர்ந்த அகில் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய அல்பியா, தனது காதலனின் வீட்டிற்கு சென்றார். அங்கு அல்பியாவை ஏற்றுக் கொண்ட அகிலின் பெற்றோர், இருவருக்கும் கோவளம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் நடத்திட முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று, தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அங்கு வந்த போலீசார், திருமணத்தை தடுத்து நிறுத்தி, அல்பியாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர். பின்னர் காயங்குளம் நீதிமன்றத்தில் அல்பியா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், அல்பியாவை அகிலுடன் சேர்ந்து வாழ அனுமதி அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்