பைக்கில் போதை மாத்திரைகள் சுத்து போட்டு பிடித்த போலீசார்

x

பைக்கில் போதை மாத்திரைகள்

சுத்து போட்டு பிடித்த போலீசார்

சென்னை பள்ளிக்கரணையில், இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து போலீசார், 5 பேரை கைது செய்தனர்.

பல்லாவரம் ரேடியல் சாலை தனியார் கல்லூரி எதிரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமாக வந்த 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் வாகனங்களை சோதனை செய்தபோது, அதில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரம் போதை மாத்திரைகள், 30 ஊசிகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், யோவான், பாஸ்கர், சந்தோஷ்குமார், ஸ்டீபன்குமார், நிவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்