திருநங்கையை கடத்த முயன்ற நபர்கள்.. காப்பாற்ற சென்ற காவலரை கடித்ததால் அதிர்ச்சி- தப்பியோட முயன்றவருக்கு கால் எலும்பு முறிவு

x

மதுரவாயலில், திருநங்கையை கத்தியை காட்டி மிரட்டி கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கையை, அவ்வழியாக வந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி கடத்த முயன்றார். அருகிலிருந்தவர்கள் இதனைக் கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், திருநங்கையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்நபர் காவலரை கடித்து காயப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, மற்ற காவலர்கள் அவரைப் பிடித்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் பெயர் ஜெகன் என்பது தெரிய வந்தது. இதனிடையே, ஜெகன் தப்பியோட முயன்ற போது தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்தது.


Next Story

மேலும் செய்திகள்