யாரென்று தெரியாமல் தடுத்ததால்.. செக்யூரிட்டியை ஓங்கி அறைந்த நபர்

x

உத்தரபிரதேசத்தில் குடியிருப்பின் காவலரும், அங்கு வசிக்கும் நபரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் புதிதாக குடியேறியுள்ளார். அவர் புதிதாக வந்தது அங்கிருந்த பாதுகாவலருக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் திடீரென குடியிருப்புக்குள் செல்ல முயன்ற அந்த நபரை வழிமறித்த காவலர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், குடியிருப்பு காவலரை தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் தாக்கியுள்ளார். இருவரும் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்