பஸ் ஸ்டாப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்.. மனைவியின் முதல் கணவன் செய்த செயலா? குழந்தையுடன் கதறி அழும் மனைவி

x

சென்னையை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக் - சந்தியா தம்பதிக்கு, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த தம்பதி கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் பேருந்து நிறுத்தத்தில், கடந்த 3 மாதங்களாக தங்கி வந்துள்ளது.

குப்பைகளை பொறுக்கி, அதன் மூலம் வரும் வருமானத்தை வாழ்க்கையை நடத்தி வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த பேருந்து நிறுத்த இருக்கையில், கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சந்தியாவிற்கு ஏற்கனவே பாண்டியன் என்பவருடன் திருமணமாகி இருந்த நிலையில், கார்த்திக்குடன் கடந்த 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

மனைவியை தன்னிடம் இருந்து அபகரித்து சென்ற கோபத்தில், கார்த்திக்கை பாண்டியன் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்