ஆசிரியை பின்னாலயே வந்து அசால்டாக செயினை பறித்த நபர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முத்துலட்சுமி, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஓடி வந்த மர்ம நபர் ஒருவர், முத்துலட்சுமியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், இதைப்பார்த்து, திருடனை துரத்திச் சென்று பிடித்து தர்ம‌ அடி கொடுத்தனர். பின்னர், போலீசில் அந்த நபரை ஒப்படைத்தனர். விசாரணையில், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பொன்ராஜ் என்பது தெரிய வந்த‌து. பங்குச்சந்தையில் பணத்தை இழந்து கடன் ஏற்பட்டதால், அதனை சரி செய்வதற்காக திருட முயற்சித்த‌தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆசிரியையிடம் செயினை பறித்து செல்லும் காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்டுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்