ஃப்ரீசர் பாக்ஸில் 4 வயது சிறுமியின் உடல் நடுரோட்டில் வைத்த பெற்றோர்.. - திடீர் பரபரப்பு

x

விருத்தாச்சலம் அருகே சாலை விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருவேப்பிலங்குறிச்சி அருகே வண்ணான்குடிகாடு கிராமத்தில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி சமித்தா என்பவர், டாட்டா ஏஸ் வாகனம் மோதி உயிரிழந்தார்.

இதனையடுத்து டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டி வந்த டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வண்ணான் குடிகாடு பேருந்து நிறுத்தத்தில் , சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமியின் உடலை வைத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்