வீட்டை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்... வாசலிலேயே காத்திருந்த தூய்மை பணியாளர் - மதுரையில் பரபரப்பு

x

மதுரை அண்ணாநகரில் உள்ள கணேஷ் என்பவரது வீட்டில், மாநகராட்சி தூய்மை பணியாளரான முத்துப்பாண்டி, தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை உடனடியாக காலி செய்ய வற்புறுத்துவதாக, உரிமையாளர் மீது முத்துப்பாண்டியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் வீட்டை பூட்டிவிட்டு உரிமையாளர் சென்று விட்டதாகவும், கடந்த 3 மாதங்களாக வீட்டிலுள்ள பொருட்களை எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்துள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வீட்டு வாசலிலேயே முத்துப்பாண்டியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். வீட்டின் உரிமையாளர் தரப்பில் கூறியபோது, வாடகை தர முடியாததால் முத்துபாண்டியின் குடும்பத்தினர் தாமாகவே வீட்டை காலி செய்வதாக கூறியதாகவும், வீட்டை காலி செய்ய பணம் வேண்டும் என அவர்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்