பழனி படியில் இறங்க முடியாமல் தவித்த முதியவர்..உடனே ஓடிவந்து உதவிய ஊழியர்கள்..இருந்தாலும் பக்தர்களை கடுப்பாக்கிய அந்த விஷயம்

x

பழனி தண்டாயுதபானி சுவாமி கோவிலுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன் என்ற 85 வயது பக்தர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். தரிசனம் செய்த பின் கீழே இறங்க மின் இழுவை ரயிலுக்கு சென்றுள்ளார். அங்கே, சேவை நேரம் முடிந்துவிட்டதால் மின் இழுவை ரயில் இயக்கப்படவில்லை. இதனையடுத்து முதியவர் கோவில் படிகளில் உட்கார்ந்தபடியே சிரமப்பட்டு கீழே இறங்கினார். இதனையறிந்த கோவில் ஊழியர்கள் அவருக்கு உதவி செய்து கீழே அழைத்து வந்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இயலாத நபர்களுக்காக மின் இழுவை ரயிலின் ஊழியர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்