ஆர்டர் செய்த துணியை வாங்காத முதியவர் - வெறியான டெலிவரி பாய் செய்த செயல்

x

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது பேரப்பிள்ளைகள் ஆன்லைனில் உடை ஒன்றை ஆர்டர் செய்துள்ளனர். அந்த உடையை டெலிவரி செய்வதற்காக, ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த டேவிட் என்பவர், வீட்டிற்கு வந்துள்ளார். 2 தினங்களாக வந்தும், வீட்டில் யாரும் இல்லாததால், திரும்பச் சென்றுள்ளார் டேவிட். பின்னர் மீண்டும் டெலிவரி செய்வதற்காக வந்த டேவிட்டிடம், மீண்டும் 2 நாட்கள் கழித்து வருமாறு பாண்டியன் கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த டேவிட், பாண்டியனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் டேவிட் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்