அடையாற்றில் மாயமான சிறுவன்... முடிவுக்கு வந்த 18 மணி நேர போராட்டம் - இறுதியில் நடந்த சோகம்

x

சென்னை அடையாறு ஆற்றில் மாயமான சிறுவனின் உடல், 18 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சாமுவேல் என்ற 14 வயது சிறுவன், நேற்று மாலை நண்பர்களுடன் ஆற்றில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி மாயமானார். இந்நிலையில், மாணவனை தேடும் பணியில் தீயணைப்பு வீர‌ர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஈடுபட்டனர். மீட்பு பணி 2வது நாளாக நீடித்த நிலையில், மாணவனின் உடல் அடையாறு ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து, மாணவன் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்