ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கு, கொத்து கொத்தாக செத்து கிடந்த வீட்டு விலங்குகள் பீதியில் கிராம மக்கள்

x

சூளகிரி அருகே மர்ம விலங்கு கடித்ததில், வளர்ப்பு விலங்குகள் உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் திகடரப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள். இவருக்கு சொந்தமான 7 செம்மறி ஆடுகள், 5 கோழிகள் மர்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் வந்த வனத்துறையினர் மர்ம விலங்கு குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்