பால் குடிக்கும் போதே பலியான சிசு..! மூத்த மகனுடன் கிணற்றில் சடலமாக கிடந்த தாய்... அதிர்ச்சி சம்பவம்

x

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உப்புத்துறை பகுதியை சேர்ந்தவர் லிஜா. வங்கியில் பணிபுரிந்து வந்த இவருக்கு 7 வயதில் பென் என்ற மகன் இருந்தார். இதனிடையே லிஜாவுக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்த நிலையில் தாய்ப்பால் குடிக்கும் போது திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் லிஜா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனிடையே தன் மூத்த மகனுடன் மாயமான லிஜா, அந்த பகுதியில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். லிஜா மற்றும் அவரின் மகனும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்