மாமூல் கேட்ட ரவுடிக்கும்பல்...ஏரியில் மிதந்த இளைஞரின் சடலம் - தட்டிக்கேட்டதால் வெறி செயல்

x

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கஞ்சா மாமூல் கேட்ட ரவுடி கும்பலை தட்டிக்கேட்டவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பெரியபாளையம், தண்டுமாநகர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர், சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், பிரவீன்குமார் மீது காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பிரவீன்குமாரின் நண்பரான குணா என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்தது தெரியவர, அவரிடம் அப்பகுதியை சேர்ந்த ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அவர்களை பிரவீன்குமார் தட்டிக்கேட்ட நிலையில், ஐந்து பேர் கொண்ட ரவுடிக்கும்பல் பிரவீன்குமாரை அரிவாளால் வெட்டிக்கொன்று ஏரியில் வீசியது தெரியவந்தது. இந்நிலையில், தினேஷ், கோகுல் மற்றும் கிஷோர் ஆகிய மூவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள மூக்கன், நித்தின் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்