கர்நாடக அரசியலில் மீண்டும் புயல்... பரபரப்பை பற்ற வைத்த அமைச்சர் - ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன டி.கே.சிவக்குமார்

x

கர்நாடகாவின் நிரந்தர முதலமைச்சர் சித்தராமையா தான் என, காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது புயலை கிளப்பியுள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. நீண்ட இழுபறிக்குப்பின், முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர். தலா 30 மாதங்கள் இருவரும் ஆட்சி நடத்துமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியதை ஏற்று பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி. பாட்டீல், 5 ஆண்டுகள் சித்தராமையா தான் முதல்வராக இருப்பார் என கூறினார். இரண்டு முதல்வர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், சித்தராமையாவை தவிர வேறு யாருக்கும் அந்தப் பதவி கிடையாது என்றும் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கட்சியில் மூத்த தலைவர்கள் இருப்பதாகவும், அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்