9 பேரின் உயிரை குடித்த ராணுவ சுவர்.. உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்...

x

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் லக்னோவின் தில்குஷா பகுதியில் ராணுவத்தின் எல்லைச்சுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2லட்சம் ரூபாயும் இழப்பீடாக மாநில அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்