லிப்ட் கேட்டு ஏறிய எம்.பி.ஏ மாணவி... கல்லூரிக்கு செல்லாமல் காட்டுக்குள் நுழைந்த பைக் - வெளிவந்த சபல புத்தி.. இரக்கமின்றி பாய்ந்த இளைஞர்

x

நாமக்கலில் கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் சாலையில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி பெரும் விபரீதத்தில் சிக்கி கண்டம் தப்பியிருக்கிறார். விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

எந்தவொரு அச்சமுமின்றி, செளகரியமாக, சுதந்திரமாக நள்ளிரவில் சாலையில் நடமாடுவது பெண்களின் கனவுலகத்தில் இருக்கும் ஆசைகளில் ஒன்று...

இந்த ஆசையை மெய்ப்பித்து காட்டுவதே தங்களின் நிர்வாக தரத்தை உலகிற்கு எடுத்துரைக்க சிறந்த வழி என ஒவ்வொரு அரசாங்கமும் அதன் ஆட்சியாளர்களும் கருத ஆரம்பித்தனர்...

அதன் முயற்சிகளில் இறங்கிய அவர்கள், சமூகத்தை நாகரிகமாகவும், அறிவு சார்ந்த சமூகமாகவும் படிப்படியாக மாற்றி, பெண்களின் இந்த கனவை ஓரளவுக்கு நினைவாக்கினாலும், பல இடங்களில் நள்ளிரவில் வெளிவரும் பெண்களுக்கு இழைக்கப்படும் அத்துமீறல்களும், பாலியல் தொல்லைகளும் பெரும் சோகங்களில் ஒன்று...

இந்நிலையில், கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் சாலையில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி ஒருவருக்கு பட்டப்பகலிலே நேர்ந்திருக்கும் சோகம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர் கேட் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார் கல்லூரி மாணவி....

பேருந்தின் தாமதமும், கல்லூரி தொடங்கும் நேரத்தை கடிகார முள் நெருங்கி கொண்டிருந்ததும் மாணவியை பதற்றம் கொள்ள செய்திருக்கிறது...

உடனே வேறு வழியின்றி சாலையில் நடக்க ஆரம்பித்த அவர், ஒரு கட்டத்தில் சாலையில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டாவது கல்லூரிக்கு சென்று விடலாம் என எண்ணி சாலையில் நின்று ஒவ்வொருவரிடமும் லிப்ட் கேக்க ஆரம்பித்திருக்கிறார்...

அப்போது, மாணவியின் சைகையை பார்த்து பைக்கை நிறுத்திய இளைஞர் ஒருவர், மாணவியை கல்லூரியில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்...

செல்லும் வழியில் இளைஞரின் சபல புத்தி வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது... மாணவியிடம் பேச்சுக்கொடுத்த அவர், ஏதேதோ காரணம் கூறி அணைப்பாளையம் புறச் சாலை வழியாக சிங்காளந்தபுரம் வழியே மாணவியை அழைத்து சென்றிருக்கிறார்....

சட்டென அங்குள்ள கரடு அடிவார வனப்பகுதிக்குள் இளைஞர் அழைத்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தாம் தவறான ஒருவரிடம் வந்த மாட்டிவிட்டோம் என எண்ணிய போது, பைக்கை நிறுத்திய இளைஞர், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியாதாக கூறப்படுகிறது

செய்வதறியாமல் பேரதிர்ச்சியில் தவித்த பெண், இளைஞருடன் மல்லுக்கட்டிய நிலையில், ஒரு கட்டத்தில் மாணவியை தாக்கிய அவர், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் நகைகளை பறித்து தப்பி சென்றிருக்கிறார்...

இளைஞரிடன் இருந்த தப்பிய மாணவி, போலீசில் புகாரளித்த நிலையில், வழக்கை கையிலெடுத்த ராசிபுரம் மகளிர் காவல் போலீசார் இளைஞரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்...

விசாரணையில், தொப்பப்பட்டி ராஜவீதியை சேர்ந்த மணி என்பவர் மாணவியிடம் அத்துமீறியது தெரியவந்துள்ளது. டிப்ளமோ படித்து முடித்த அவர், ஒன்பதாம் பாலிகாடு பகுதியில் உள்ள கரும்பு அரவை ஆலையில் பணியாற்றி வருவது தெரியவர, அங்கு சென்ற போலீசார் இளைஞரை கைது செய்தனர்....

கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் சாலையில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்ட கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இந்த சோகம் நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது....


Next Story

மேலும் செய்திகள்