திடீரென பழுதாகி நின்ற லிஃப்ட்... உள்ளே மாட்டி கொண்ட 7 பேர் - தனியார் உணவகத்தில்.. திக்.. திக். நிமிடங்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் லிஃப்டில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தனியார் உணவகம் ஒன்றில் வளைகாப்பு நிகழ்விற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் வந்திருந்தனர். நிகழ்வு முடிவடைந்ததும் அவர்கள் லிஃப்டில் தரைத்தளம் வந்த போது, திடீரென லிஃப்ட் பழுதாகி நின்றது. உணவக நிர்வாகத்தினரால் லிஃப்டை இயக்க முடியாத நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்