பதறாமல் ஸ்மூத்தாக திருடிய லேடி... பக்காவாக சிக்க வைத்த சிசிடிவி விசாரணையில் சொன்ன ஷாக் செய்தி

x

மகாராஷ்டிராவில் உள்ள வணிக வளாகத்தில் இருந்த நகைக்கடையில் கைவரிசை காட்டிய ஐடி நிறுவன பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர். விமன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு நகைக்கடையில் கடந்த 5ஆம் தேதி 2 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. அப்போது கடையில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றிய விசாரித்த போது பெண் ஒருவர் கடைக்கு வந்த நகைகளை திருடுவது பதிவாகி இருந்தது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் அனு வேத்பிரகாஷ் ஷர்மா என்பதும் ஐடி ஊழியர் என்பதும் தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய அனுவை கைது செய்தனர். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதமும் இதே போல் வேறொரு நகைக்கடையில் கைவரிசை காட்டியதும் தெரியவந்திருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்