13 பேரை கொன்று மனித வேட்டையாடிய கொலைகார புலி...! நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிக்கியது
13 பேரை கொன்று மனித வேட்டையாடிய கொலைகார புலி...! நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிக்கியது
சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள வாட்சாவில் 6 பேரையும், பண்டாராவில் 4 பேரையும், பிரம்மபுரி வனப்பகுதியில் 3 பேரையும் புலி கொன்றது.
நாக்பூர் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் புலியை பிடிப்பது குறித்து
விவாதிக்கப்பட்டது. அதன் படி, தடோபா புலி மீட்புக் குழு, சந்திராபூர், நவேகான்- நாஜிரா மற்றும் பிற பிரிவுகளின் விரைவு மீட்புக் குழுவினர்
புலியைப் பிடிக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட்டனர். இதனையடுத்து வாட்சா வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி, புலியை
பிடித்தனர். இந்த புலி, நாக்பூரில் உள்ள கோரேவாடா மீட்பு மையத்திற்கு மறு வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Next Story