செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்.. செய்தியாக மாறிய சம்பவம்..அமெரிக்காவை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு..

x
  • அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பெண்ணைக் கொலை செய்த கொலைகாரன், அதை செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளரையும், பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியையும் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ஓர்லாண்டோ பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்...
  • இதை செய்தி சேகரிக்க பத்திரிகையாளரும், ஒளிப்பதிவாளரும் நிகழ்விடத்திற்கு சென்றுள்ளனர்...
  • அப்போது அங்கு மீண்டும் வந்த கொலைகாரன் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். அதில் பத்திரிகையாளர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒளிப்பதிவாளர் படுகாயம் அடைந்தார்.
  • மேலும் அருகில் இருந்த வீட்டிலும் சென்று கொலைகாரன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 வயது சிறுமி உயிரிழந்தார்.
  • சிறுமியின் தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கெய்த் மெல்வின் மோசஸ் என்ற 19 வயது இளைஞரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்