துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் விவகாரம்.. சொந்த ஊரில் உடல் நல்லடக்கம்... | Selam

x

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, தமிழ்நாடு மீனவர் ராஜாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், நல்லடக்கம் செய்யப்பட்டது...

கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தமிழக மீனவர் ராஜா உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்து, அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் காத்திருந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மேட்டூர் எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், உயிரிழந்தவரின் சொந்த ஊரான கோவிந்தம்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்