விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்ட விவகாரம்.. முழுமையாக அகற்றப்படாத விஷத்தால் விபரீதம்

விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்ட விவகாரம்.. முழுமையாக அகற்றப்படாத விஷத்தால் விபரீதம்
x

குளித்தலை அருகே விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், மேலும் 7 மயில்கள் உயிரிழந்தன. கரூர் மாவட்டம், பிள்ளாபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் 8 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக முருகானந்தம் என்கிற விவசாயி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அப்பகுதியில் விஷம் கலக்கப்பட்ட நெல்மணிகள் முழுமையாக அகற்றப்படாததால், இன்றைய தினம் மேலும் 7 மயில்கள் நெல்மணிகளை சாப்பிட்டு உயிரிழந்தன. இதையடுத்து, அப்பகுதியை முழுமையாக சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்