ரயிலில் 3 பேரை எரித்து கொன்ற சம்பவம்.. பின்னணியில் இருப்பது யார்? - சந்தேகத்தை கிளம்பும் நிகழ்வுகள்

x

கேரளா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளி ஷாருக் சைஃபியின் பின்னணியில் இருப்பது யார்? உள்ளிட்ட பல்வேறு கட்ட விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் ஓடும் ரயிலில் மூன்று பேர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் எனவும், அதன் பின்னணியில் தனி நபர்கள் அல்லது அமைப்புகள் செயல்பட்டு இருக்கலாம் எனவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் இந்த வழக்கில் கைதாகியுள்ள ஷாருக்கியின் கடந்த இரண்டு ஆண்டு போன் கால் மற்றும் சமூக வலைத்தள சாட்டிங் பட்டியலை போலீசார் ஆய்வு செய்கின்றனர். ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பாமல், தள்ளி சென்று வேறொரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியது ஏன்? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களும் எழும்புவதால் இது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்