இளம்பெண் மரணம் சொன்னதை செய்யாத மருத்துவமனை?முற்றுகையிட்ட உறவினர்கள்

x

கரூரில் இளம்பெண் மரணத்திற்கு இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்காததை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், மணவாசி கிராமத்தை சேர்ந்த வளர்மதி என்பவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் இழந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில்,

மருத்துவமனைக்கு எதிராக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், உரிய இழப்பீடு வழங்குவதாக, மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இழப்பீடு வழங்கப்படாததால்,

உறவினர்கள் மீண்டும் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்