பள்ளிக்கு மாணவர்களை படிக்க அனுப்பினால் சித்தாள் வேலையில் ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர்... வெளியான புகைப்படம் - அதிர்ச்சியில் பெற்றோர்

x

புதுக்கோட்டை அரசு பிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிட பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பள்ளி மாணவர்களையே சித்தாள் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அனுமதியின்றி மாயனூர் காவிரி ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்ட புதுக்கோட்டை மாணவிகளில் நால்வர், நீரில் மூழ்கி உயிரிழந்ததின் சோக வடு மறைவதற்குள், அரசு பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் சித்தாள் வேலையில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்