மாப்பிள்ளை புதுக்கோட்டை.. பொண்ணு போலந்து... பட்டு புடவையில் ஜொலித்த மணப்பெண்...

x

புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இவரது டிராவல்ஸ் ஏஜென்சிக்கு அடிக்கடி பணி நிமித்தமாக அதே பகுதியை சேர்ந்த ஹனியா என்கின்ற அன்னா ரில்ஸிகா என்ற பெண் வந்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. போலந்தில் இருவரும் சட்ட முறைப்படி நிச்சயம் செய்துள்ளனர்... தொடர்ந்து இந்தியா கலாச்சாரம் மற்றும் இந்து மத நம்பிக்கை கொண்ட ஹனியாவின் ஒப்புதலுடன் இருவருக்கும் புதுக்கோட்டை செல்லுக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கோலகலமாக இன்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய பட்டு சேலை அணிந்து தாலி கட்டிக் கொண்டு ஹனியா புதுக்கோட்டை மருமகள் ஆனார்... திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்