விமான நிலைய கழிவறையில் கிடந்த தங்க கட்டிகள்...கடத்தி வந்தது யார்? அதிகாரிகள் விசாரணை | Trichy | Gold

x

திருச்சி விமான நிலைய கழிவறையில் 199 கிராம் எடை கொண்ட 2 கடத்தல் தங்க கட்டிகள் கேட்பாரற்று கிடந்தது. அதனை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளை கடத்தி வந்தது யார் என விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் சோதனையில் கடத்தல் தங்கம் எதுவும் பிடிபடவில்லை, இந்நிலையில் கழிவறையில் கிடந்த 2 தங்க கட்டியின் மதிப்பு 10 லட்சத்து 60 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்