சடன் பிரேக்கில் பட்டென எகிறிய பெண்... தட்டி கேட்ட பெண்ணை மிரட்டிய ஓட்டுநர் - "என்ன ரவுடியா நீ.. பஸ்ஸ மேல ஏத்திட்டு போயிடுவன்"

x

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தின் ஓட்டுநர் பயணிகளிடம் ஆவேசமாக நடந்துகொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. செங்கல்பட்டில் இருந்து சோகம் செல்லும் வழியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் கூறியுள்ளனர். அப்போது ஆவேசமடைந்த ஓட்டுநர் சந்திரசேகர், திடீரென பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்தின் முன் பக்கத்தில் இருந்த சீட் கழன்று, அதில் அமர்ந்திருந்த பெண் தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பாக பயணிகள் கேட்டபோது, ஆத்திரம் அடைந்த ஓட்டுநர், பேருந்தை மேலே ஏற்றிவிடுவேன் என மிரட்டல் விடுத்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்