போதை வெறியில் அசுர வேகத்தில்.. காரை ஓட்டி பயங்கரம் நிகழ்த்திய பெண் - அப்பாவியை தரதரவென இழுத்து சென்ற கோரம்

x

ஐதராபாத்தில் மதுபோதையில் காரை இயக்கி வந்த பெண் ஏற்படுத்திய விபத்தில் மாநகராட்சி ஊழியர் படுகாயம் அடைந்தார். கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியில் மதுபோதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்த பெண், சாலை எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மாநகராட்சி ஊழியர் மீது பலமாக மோதியதில், ஊழியரின் வண்டி சிறுது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது. அந்தக் காரை ஓட்டி வந்த பெண்ணுடன் மேலும் 2 பெண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண் ஓட்டி வந்த கார் அதிவேகமாக வருவதைக் கண்ட மாநகராட்சி ஊழியர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போதும் விபத்து நிகழ்ந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தியவர்களைத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்