பிஎம்2 யானையை விரட்ட 8 கும்கியை களமிறங்கிய வனத்துறையினர் | Gudalur

x

அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட பிஎம்2 யானை தற்போது கூடலூர் பக்கம் வரத் துவங்கியுள்ள நிலையில், வனத்துறையினர் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மீண்டும் அந்த யானை கூடலூர் பகுதியில் வராமல் தடுப்பதற்காக முதுமலை யானைகள் காப்பகத்தில் இருந்து ஜான், கிருஷ்ணா, கணேஷ், பொம்மன், சுமங்களா, சீனிவாசன் விஜய் சுஜய் எட்டு யானைகள் உதவியுடன் உடுமலை வனப்பகுதி எல்லையில் நிற்க வைக்கப்பட்டுள்ளன.

மேலும் எல்லையை தாண்டி வராமல் இருப்பதற்காக ஆங்காங்கே தீ மூட்டி யானை வருவதை தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பிஎம்2 யானையை மீண்டும் வனப்பகுதிக்குள், விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்