டீ-க்கு காசு தர மறுத்த பெண் இன்ஸ்பெக்டர் - ரெண்டே நாளில் காத்திருந்த அதிர்ச்சி..!

x

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னை படப்பை பகுதியில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உள்பட 4 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த கடையில் தேநீர் அருந்திய போலீசார், பணம் தர மறுத்து உரிமையாளருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்த, தேநீர் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்