ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த விவசாயி..! திடீரென வந்து... மிதித்தே கொன்ற யானைகள்... கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி

x

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விவசாயி, யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் முகாமிட்டிருந்த 2 காட்டு யானைகள், தேவசமுத்திரம் ஏரியில் ஆனந்த குளியல் போட்டது. இந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி வழியாக மீண்டும் சாமந்தமலையை நோக்கி வந்தன. அதிகாலையில், அங்குள்ள ஏரிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள், ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெருமாள் என்பவரை மிதித்து தாக்கின. பெருமாளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராமத்தினர், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், செல்லும் வழியிலேயே பெருமாள் உயிரிழந்தார். சாமந்தமலை ஏரிக்கரையில் முகாமிட்டுள்ள அந்த யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர். கிராம மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்