அரசுப்பள்ளி ஆசிரியரை உருட்டுக்கட்டையால் தாக்கிய ஓட்டுநர்.. பள்ளி நிர்வாகமே காரணமா?

x

திண்டுக்கhttps://youtu.be/vXXtlBLbq2oல் மாவட்டம் பழனியில், பள்ளி ஓட்டுநர் தாக்கியதில் ஆசிரியர் காயமடைந்தார்.

நெய்க்காரப்பட்டியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் மைதானத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பள்ளி கார் ஓட்டுநர் கௌரி சங்கர், மணிகண்டனை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதையடுத்து, மணிகண்டனை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களிடையே வேலை நேரம் குறித்த பிரச்சனை நிலவும் நிலையில், ஓட்டுநர் மூலம், ஆசிரியரை பள்ளி நிர்வாகம் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்