எச்சரிக்கையை மதிக்காத டிரைவர்.. 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ.. ஊசலாடும் பயணிகள் உயிர்

x

குமரி அருகே உடைந்த பாலம் வழியாக பயணித்த ஆட்டோ, 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

நடைக்காவு ஊராட்சிக்கு உட்பட்ட, பாத்திமா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இருபுறங்களிலும், கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனிடையே, இவ்வழியாக பயணிக்க தடை விதித்து, போலீசார் தடுப்புகளை அமைத்துள்ள நிலையில், தடையை மீறி பயணிகளுடன் பயணித்த ஆட்டோ, பாலத்தின் சாலையோரத்தில் உள்ள 40 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனிடையே, அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குழந்தை உட்பட 4 பேரை மீட்டு, மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து ஏற்பட்ட பகுதியில், ஆபத்தை உணராமல் மக்கள் தொடர்ந்து தடுப்புகளை மீறி, பயணித்து வருகின்றனர். இதனால், சேதமடைந்த பாதையை, விரைந்து சரிசெய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்