கணக்கு கேட்டதால் வந்த தகராறு... காவலாளியை அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர் - குமரியில் அதிர்ச்சி

x

கன்னியாகுமாரி மாவட்டத்தில் கடையின் இரவு நேர காவலாளியை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தாக்கியதால் உயிரிழந்த விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியை சேர்ந்தவர் அர்ஜீனன். இவர் சூழாலில் உள்ள டிரேடர்ஸ் கடை ஒன்றில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் பணிபுரிந்து வந்த ஆட்டோ ஓட்டுநர் பினு என்பவர் இரவு நேரத்தில் கடையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அப்போது, சிமெண்ட் மூட்டை தொடர்பாக பினுவிடம் அர்ஜீன் கணக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அர்ஜீனை பினு தலையில் தாக்கியுள்ளார். இந்நிலையில், நிலை குலைந்து விழுந்த அர்ஜீன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள பினுவை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்