தாயை கொலை செய்த கொடூர மகன்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

x

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தாயைக் கொலை செய்த மகனை, பொதுமக்களே பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கொட்டாரக்கரை அருகே உள்ள செங்கமாடு பகுதியைச் சேர்ந்த மினிமோள் என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால், கொல்லம் அருகே உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை காப்பகத்தில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவருடைய மகன் ஜோமோன், நடு வழியில் திடீரென்று வாகனத்தை நிறுத்தி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாயாரை சரமாரியாக குத்தினார். இதில், தாயார் மினிமோள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், ஜோமோனை நெருங்கி சென்றபோது, அவர் அந்த வழியாக வந்த லாரியில் ஏறி தப்ப முயன்றார். ஆனாலும், பொதுமக்கள் லாரியை மறித்து, ஜோமோனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் ஜோமோனும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்