பிறந்து சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற கொடூர தாய்...! - காவலர் செய்த செயலால் வியந்துபோன மக்கள்

x

தெலங்கானா மாநிலம் காசிகுடாவில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன குழந்தையை, அடுக்குமாடி குடியிருப்பின் அருகே தாய் விட்டு சென்றுள்ளார்.

ஆதரவின்றி கிடந்துள்ள குழந்தையை கண்ட மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சென்ற சாய்குமார் என்ற காவல் ஆய்வாளர், உடனடியாக குழந்தையை கையில் ஏந்தி மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.

அவருக்கு அந்த குடியிருப்பில் வசிக்கும் பெண்களும் உதவி செய்தனர்.

காவல் ஆய்வாளர் சாய்குமாரின் செயலைக் கண்டு வியந்த அப்பகுதி மக்கள், சமூகத்தில் இப்படியும் பொறுப்பான காவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்